அன்பின் சிகரமாய் எமதன்னைக்கும் அன்னையாய் “அன்ரி” என அன்பாய் அழைத்த எமது இனிய உறவு பிரிந்தது எமைவிட்டு. அன்பும் அடக்கமும் ஆற்றலும் ஒருங்கே அமைய பெற்றீர் பண்பாய் இருப்பதில் பாத்திரமானீர் பணிவு பொறுமை குணமெனக் கொண்டீர் எண்ணிய கருமம் ஆற்றிடத் துணிந்தீர் இல்லறம் செழித்திட ஓயாமல் உழைத்தீர். எமதெண்ணத்திலும், உணர்விலும் கலந்த உறவே! எம்மை நல்வழி காட்டி ஓளி கொடுத்த தீபமே! எங்கள் தாயின் பிரிவில் துவண்ட எம்மை உங்கள் அன்பின் அரவணைப்பால் துயர் நீக்கிய தியாகச்சுடரே! உணர்ந்தோமே இறுதித் தருணத்தை , உள்ளம் நடுங்க , கண்கள் கலங்க, இறுகக் கட்டி தழுவிய நேரம். என் முருகன் வந்து எனை ஆட்கொள்வான் என உறுதியுடன் அனுதினமும் உச்சரித்த உங்களது இறை பக்தியில் நெகிழ்ந்து அழைத்தாரோ அவர் திருநாளிள் இருகரம் பற்றி? உமை எத்தருணத்தல் காண்போம் இனி ? ஒம் சாந்தி! ஒம் சாந்தி! ஒம் சாந்தி! சகோதரி ஈஷ்வரி கோணேசபிள்ளை குடும்பம்.