முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மரணஅறிவித்தல் - அமரர் திருமதி நாகம்மா(திருப்பதி) அருணாசலம்


மரணஅறிவித்தல் 

திருமதி நாகம்மா(திருப்பதி) அருணாசலம்

திருமதி நாகம்மா(திருப்பதி) அருணாசலம் 
23 JUN 1934 - 24 OCT 2019 (85 வயது)
பிறந்த இடம் :கரம்பொன் தெற்கு
வாழ்ந்த இடங்கள் :கொழும்பு,  கனடா

யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா அருணாசலம் அவர்கள் 24-10-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னப்பு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சிவேந்திரன்(ராசா), தாரணிதேவி(தாரணி- ஜேர்மனி), ரதிதேவி(சூட்டி- கனடா), குகேந்திரன்(இந்திரன்- இங்கிலாந்து), லோகேந்திரன்(லோகன் -இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்மகுலசிங்கம்(சோதி), மதிவதனி(வதனி), சந்திரகலா(சாந்தி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சத்தியபாமா, காலஞ்சென்ற பரமேஸ்வரி(ஈஸ்வரி), இராமசந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற அருணாசலம், கோணேசபிள்ளை இந்திராவதி ஆகியோரின் அன்பு மைத்தினியும்,
ஆதித்யா அவர்களின் அன்பு அம்மம்மாவும்,

தமீரன், அதீரன், யதூரன், தயூரன், சாயூரன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தாரணி தர்மகுலசிங்கம் - மகள்
Mobile : +493035105538

இந்திரன் - மகன்
Mobile : +447780917774

லோகன் - மகன்
Mobile : +919788211441

ரதிதேவி(சூட்டி) - மகள்
Mobile : +16473484380





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நினைவுமலர் (PDF)

எம் தாயின் பாதத்தை வணங்கி இம்மலரைச் சமர்ப்பணம் செய்கின்றோம். அம்மா உந்தன் எண்ணங்களும், வார்த்தைகளும் எம் இதயத்தை நிறைத்து நிற்கின்றது. தமக்கென வாழா தியாகச்சுடர் நீங்களம்மா. சிறுவயது முதலே எல்லோரோடும் அன்பு, பாசம், பொறுமை எனும் பெண்மைக்கே உரிய உயரிய பெருங்குணங்களுடன் வாழ்ந்த அன்புருவம்மா நீங்கள். இல்வாழ்வில் இதயசுத்தியுடன் வாழ்ந்து பிள்ளைகள் நலனே தன்வாழ்வாய் இருந்தீர்கள். நல்லறிவு புகட்டி நல்வழிகாட்டி எமக்கு முன் மாதிரியாய் வாழ்ந்து காட்டிய அன்புத்தெய்வமே! தாய்மையின் இருப்பிடமே தெய்வம் அம்மாவாய் வந்தால் அது தாங்கள் என்பதை எமக்கு உணர்த்தியவரே! – நீங்கள் எம்மைவிட்டுப் பிரிந்தாலும் எம் உள்ளத்தில் என்றும் தெய்வமாய் வாழ்வீர்கள் தாயே! கண்ணீரால் மலர்தூவி உங்கள் பாதக்கமலத்தில் எம் வேதனைகளையும் கவலைகளையும் சமர்ப்பித்து வணங்குகின்றோம் அம்மா! இம்மலரை தாயின் பாதத்திருவடியில் எம் குடும்பச் சார்பாக சமர்ப்பணம் செய்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! சுபம்

LankaSri Notice : அமரர் திருமதி நாகம்மா அருணாசலம்

https://www.ripbook.com/60943656

கண்ணீர் அஞ்சலி - பரமேஸ்வரி கோணேசபிள்ளை குடும்பம்

அன்பின் சிகரமாய் எமதன்னைக்கும் அன்னையாய் “அன்ரி” என அன்பாய் அழைத்த எமது இனிய உறவு  பிரிந்தது எமைவிட்டு. அன்பும் அடக்கமும் ஆற்றலும்  ஒருங்கே  அமைய பெற்றீர் பண்பாய் இருப்பதில் பாத்திரமானீர் பணிவு பொறுமை குணமெனக் கொண்டீர் எண்ணிய கருமம் ஆற்றிடத் துணிந்தீர் இல்லறம் செழித்திட ஓயாமல் உழைத்தீர். எமதெண்ணத்திலும்,  உணர்விலும் கலந்த உறவே! எம்மை நல்வழி காட்டி ஓளி கொடுத்த தீபமே! எங்கள் தாயின் பிரிவில் துவண்ட எம்மை உங்கள் அன்பின் அரவணைப்பால் துயர் நீக்கிய தியாகச்சுடரே! உணர்ந்தோமே இறுதித் தருணத்தை , உள்ளம் நடுங்க , கண்கள் கலங்க,  இறுகக் கட்டி தழுவிய நேரம். என் முருகன் வந்து எனை ஆட்கொள்வான் என உறுதியுடன் அனுதினமும் உச்சரித்த உங்களது இறை பக்தியில் நெகிழ்ந்து   அழைத்தாரோ அவர் திருநாளிள் இருகரம் பற்றி? உமை எத்தருணத்தல் காண்போம் இனி ? ஒம் சாந்தி! ஒம் சாந்தி! ஒம் சாந்தி! சகோதரி ஈஷ்வரி கோணேசபிள்ளை குடும்பம்.